Thursday, October 5, 2017

Problem With TrueCaller and Similar Apps

There are lot of so called caller identification apps that will put a name for an unknown number calling your cellphone. But the ugly truth behind this is usually overlooked. People just don't understand that just by installing these stealthy apps, they are breaching privacy of others and also putting themselves and others in risk. Let me explain few of the possible scenarios and a possible solution for handling apps like this.

1. Person A gives his number to Person B so that they can stay in touch (may be for business or personal needs). Person C asks Person B for Person A's mobile number.

In usual case, Person B will politely refuse to share Person A's number. In some cases Person B will call Person A to get his consent to give his number to Person C.

But in TrueCaller's case, the entire contact list of Person B is uploaded to TrueCaller's server WITHOUT getting the consent of anyone in the list.

2. Person A stores some sensitive information like credit card numbers and PIN numbers as contacts. (It is stupid, but people always do that right?)

In usual case, Person A puts his credit card at risk in case someone snatches his phone or hacks in to his phone.

But with TrueCaller, the numbers are uploaded to the third-party server by default. They may claim that their system will filter out numbers that are not phone numbers. But who is going to audit it?

3. Person A stores his brother's/girlfriend's/son's/mom's number with their pet-name.

In usual case, this can be seen only by few (if they are staring in to Person A's phone when their dear one is calling.

With TrueCaller, the contact is uploaded and anyone who receives a call from the number may get the pet/nick name of the person. Similarly, some people store relationships like "Person A's Mom", "Person B's Wife" etc in their phone. With whose consent these sensitive information are shared with anyone on the Internet?

4. A womanizer or a scammer can browse the TrueCaller database with random numbers and get the names. Sometimes information like the company they work for or the college they study are also included with the contact name. With this, they can call the person and start a conversation like "Hey, Rajesh, how are you? I studied MSc with you..."

Above mentioned are not the only problems you can have. There are lot more possibilities that we can never figure out! The main problem with TrueCaller and such apps are this. My (or your) mobile number, name and often, other sensitive information are uploaded to the server of a private third-party's server without my (or your) consent just because some asshole who stored your number in his contact list installed a stupid app to say him who is calling from an unknown number.

To avoid the above mentioned problems and to ensure that everyone's privacy is respected, these apps should first get the consent of the users before they store their data in their servers and make them accessible to the public. If someone who has your contact uploads their entire contact list to these thrid-parties, they should send an SMS or make an automated voice call to get your consent before even storing your data in their servers. Unless this is done, these apps remain as a serious privacy and security threat to the public.

If you want to protect yourselves and your family and friends from these rouge apps, follow the below steps.

1. Uninstall these rouge apps if you have them installed
2. If these rouge apps come pre-installed with your phone, then disable them before you start using the phone.
3. Go to their sites and unlist your numbers.
4. Tell about the dangers to your friends and family and ask them to do the above steps.
5. Give feedback to developers of these unethical apps. Give them poor rating. File complaints against them in appropriate forums.

Thursday, September 7, 2017

"நீட்" (NEET) குறித்த ஓர் நீண்ட பதிவு

2007ல் பொறியியல் நுழைவுத் தேர்வு முறை நீக்கப்பட்ட போது ஏற்கனவே பொறியியல் படித்து முடித்திருந்த நான் அதை எதிர்த்தேன். அப்போது என் மனதில் இருந்த எண்ணங்கள் வேறு. நான் இக்கட்டான குடும்ப சூழலில் இருந்து 12ஆம் வகுப்பு படித்தவன். என் கையெழுத்து சரியிருக்காது. மனப்பாடத் திறன் குறைவாகப் பெற்றவன். ஆகவே இயல்பாகவே எனக்குப் பொதுத் தேர்வில் மதிப்பெண் கிடைப்பது கடினம். குறிப்பாக எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. உயிரியல்த் தேர்வை நான் சிறப்பாக எழுதியிருந்தேன். 198 மதிப்பெண்களுக்குச் சரியான பதில்களை எழுதியிருந்தேன். ஆனால் வந்த மதிப்பெண்களோ 168. 

எப்படியும் மருத்துவம் படிக்கப் போவதில்லை என்று முடிவானதால் நான் மறுதிருத்தம் கோரவில்லை. ஆனால் சில ஆசிரியர்களின் கூற்றுப் படி என் தேர்வெழுதும் விதமே சரியில்லையாம். நான் எதையும் மனப்பாடம் செய்து எழுதியதில்லை. சொந்த நடையில் மட்டுமே எழுதுவேன். ஆனால் அவர்கள் கூற்றுப்படி புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுதுபவனும் நானும் சமமல்ல. அவன் கண்டிப்பாக என்னைவிட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறினார்கள். அது எனக்கு நெருடலாக இருந்தது. 

ஆனால் நுழைவுத்தேர்வு முடிவுகள் வந்தபோது என்னோடு பயிற்சி வகுப்புகளுக்கு (கோச்சிங் கிளாஸ்) வந்து என்னைவிட அதிகப் பொதுத் தேர்வு மதிப்பெண்கள் பெற்றவர்களைவிட நான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இதில் அவர்களுக்கும் எனக்கும் ஒரே பள்ளி, ஒரே யிற்சி வகுப்பு. ஆனால் அவர்கள் பொதுத்தேர்வில் என்னைவிட மிக அதிக மதிப்பெண்கள். நான் அவர்களைவிட நுழைவுத்தேர்வில் பல மதிப்பெண்கள் அதிகம். ஏன் இந்த முரண்பாடு? ஒருவேளை நுழைவுத்தேர்வு இல்லாதிருந்திருந்தால் நான் படித்த கல்லூரியும் பிரிவும் எனக்குக் கிடைத்திருக்காது. நிற்க... 

ஆகையால் 2007ல் நுழைவுத் தேர்வை ஆதரித்து போல் இப்போதும் நீட்டை ஆதரிப்பேனா? இல்லவே இல்லை. எனக்கு யிற்சி வகுப்பு எடுத்த ஆசிரியர் விருப்ப ஓய்வு (VRS) வாங்கிவிட்டு சொந்தமாகப் பள்ளி கட்டியதும் அந்த கோச்சிங் நிறுவனம் சொந்தமாகப் பொறியியல் கல்லூரியே கட்டியதும் நினைவிருக்கிறது. அது அப்போது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அது எவ்வளவு பெரிய சுரண்டல் என்றும் பணக்காரர்கள் மட்டுமே மேலேற உதவும் கட்டமைப்பு என்றும் புரிகிறது. என்னதான் செய்வது?

சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்தது போலவும், அதற்க்கு முன் இருந்த மெட்ரிக் கல்வி முறையும் தற்போது பரவிவரும் சி.பி.எஸ்.சி. கல்வி முறையும் எதோ சர்வதேசத் தரத்தில் இருப்பதுபோலவும் பலரும் நம்புகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. சமச்சீர் கல்வி புத்தகங்கள் வெளியிடப்பட்டபோது என் தந்தை அப்புத்தகங்களில் இருந்த குறைகளை ஆராயும் குழுவில் இருந்தார். அதற்க்கு முன் இருந்த மாநிலக் கல்வித்திட்டத்தோடு ஒப்பிட்டால் சமச்சீர் கல்வி பன்மடங்கு மேம்படுத்தப் பட்டுள்ளதாக 33 வருட ஆசிரியப் பணி அனுபவம் உள்ள அவர் சொன்னார்.

பிறகு நானும் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த பாடநூல் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். உண்மையில் நான் பயின்ற பாடத்திட்டத்தைவிட மிகச் சிறந்த முறையில் படங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன. அப்படியே அந்தத் திட்டம் சரியில்லை என்று கருதுபவர்கள் சற்றேனும் அறிவு நாணயம் உள்ளவர்களாக இருந்தால், பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த சமச்சீர் கல்வி முறையையே வேண்டாம் என்கிறார்கள். 

இங்குதான் "உள்குத்து" உள்ளது. அதுவரை பணக்காரனுக்கு ஒரு கல்வித்திட்டம் (மெட்ரிக்) ஏழைக்கு ஒரு கல்வித்திட்டம் (மாநிலக் கல்வித்திட்டம்) என்று இருந்த முறை நீக்கப்பட்டு அனைவருக்கும் சமமான கல்வி என்ற சமூக நீதி இவர்கள் கண்ணை உறுத்துகிறது. இதுநாள்வரை நவீன வர்ணாஸ்ரமமாக நிலவிவந்த கல்விப் பாகுபாடு இல்லாமல்போனது இவர்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. இதை மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.

மேலும் கல்வித் தந்தைகளும், கல்வி வள்ளல்களும், கட்டிவைத்திருக்கும் பள்ளிகளில் "சிறப்புக் கட்டணம்" வசூலிக்க அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் (selling point) "எங்கள் கல்வித்திட்டம் மேலானது". இன்று சமச்சீர் கல்வியில் அந்த வாதம் தவிடுபொடியாகிவிட்டது. ஆகையால் அவர்களுக்கும் "வியாபாரம்" படுத்துவிடுமோ என்ற கவலை. இப்படி அவனவனுக்கு அவனவன் கவலை.

ஆகவே இன்று NEET போன்ற சிக்கல்களைக் கையில் எடுத்துக்கொண்டு சமச்சீர் கல்வியின் மீது உள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் அற்பவாதிகளிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். பாடப்புத்தகத்தை மனனம் செய்து அப்படியே கக்குவது தவறான ஒரு கல்வி முறையினால் வருவது அல்ல. அது தவறான தேர்வு மற்றும் திருத்த (evaluation) முறையினால் வருவது. இதேபோன்ற சூழலை எல்லாக் கல்வி முறையிலும் கொண்டுவர முடியும். ஆகவே சமச்சீர்க் கல்வித் திட்டத்தை மாற்றவேண்டியது இல்லை! அதில் உள்ள தேர்வு முறையையும் விடைத்தாள் திருத்தும் முறையையும் மாற்றினால் போதும்.

குறிப்பாக புத்தகத்தில் உள்ள கணக்குகள் எண்கள்கூட மாறாமல் வினாத்தாள்களில் வருவது, அப்படியே புத்தகத்தில் உள்ளதை எழுத்துக்கு எழுத்து எழுதுவது போன்ற வகையில் தேர்வுகள் இல்லாமல் படித்ததை புரிந்துகொண்டு விடையளிக்கும் வகையில் நம் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும். இது ஒன்று மட்டுமே போதும். நல்ல புரிதலும், சிந்திக்கும் திறனும் உள்ள மாணவர்களே நல்ல மதிப்பெண்கள் பெறும்படி தேர்வுமுறை இருக்கும்போது தனித்தனி நுழைவுத்தேர்வுகள் நடத்தவும் தேவை இருக்காது.

மருத்துவ நுழைவுத் தேர்வு என்று தனியாக ஒன்று இருப்பது எதற்கு? ஏற்கனவே பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரால் பாடம் எடுத்து, அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்தானே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்? அப்படி இருக்க அதற்க்கு எதற்கு ஒரு தனி நுழைவுத்தேர்வு? இத்தகைய தேர்வுகள் இதை வைத்து பயிற்சிவகுப்பு நடத்தி காசுபார்க்கும் கயவர்களுக்கும், ஆறாம் வகுப்பிலிருந்தே தன்பிள்ளையை பல லட்சம் கட்டிப் பயிற்சிவகுப்புகளுக்கு அனுப்பும் ஆண்டைகளுக்குமே உதவும். இதனால் எப்படி மருத்துவக் கல்வியின் தரம் உயரும்?

அப்படியென்றால், 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, மருத்துவக் கல்லூரியில் உள்ள தேர்வுகள் எல்லாம் வடிகட்டாத ஒரு தகுதியற்ற மாணவனை இந்தத் தகுதித்தேர்வு மட்டும் மந்திர வித்தை மூலம் கண்டுபிடித்துவிடுமா? அப்படி என்ன அந்தத் தேர்வு செய்கிறது? இதுவரை விண்டோஸ் 8 பயன்படுத்திவந்தவரிடம் விண்டோஸ் எக்ஸ்.பி உள்ள கணினியைக் கொடுத்துப்பாருங்கள். அவர் திணறிப் போவார். அதானால் விண்டோஸ் 8 இயங்குதளம் எக்ஸ்.பி இயங்குதளத்தைவிடத் தரம் தாழ்ந்ததாகிவிடுமா? அதுபோலவே உள்ளது இவர்கள் வாதமும். ஒருவன் 12 வருடங்கள் படித்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்காமல் வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்டால் அது எப்படி நியாயம்?

இப்படி NEETக்கு வக்காலத்து வாங்கும் அறிவுஜீவிகளிடம் இதை மட்டும் கேளுங்கள். "வெளிநாடுகளில் மேற்படிப்புப் படிக்க அந்த நாட்டு மொழிகளில் தகுதித்தேர்வு எழுதுவது போல, தமிழகக் கல்லூரிகளில் படிக்க வரும் அனைவரும் தமிழிலும் தகுதித்தேர்வு எழுதித் தேறி இருக்கவேண்டும் என்று சொன்னால் ஏற்பீர்களா?" என்று. இந்த நவீன-தீண்டாமைவாதிகள் ஒன்று தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் அல்லது நம்மை தேசத் துரோகி என்று உச்ச சுதியில் கத்துவார்கள். ஆகையால் தரம் உயர்த்துவது, சம உரிமை போன்ற NEET  ஆதரவு வாதங்கள் எல்லாம் சற்று உற்று நோக்கினால் தரைமட்டமாக விழுந்துவிடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு முக்கியமான கருத்தையும் முன்வைக்கிறேன். மருத்துவம் மட்டும் அல்ல. எந்தப் படிப்பும் படிப்பதற்கு தேர்ச்சி ஒரு தகுதியாக இருக்கலாமே ஒழிய, மதிப்பெண்கள் ஒரு தகுதியாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவன் குடும்பத்திலும் ஒவ்வொரு துன்பம் இருக்கும். வெகுசிலரே கவலைகள் இல்லாமல் பள்ளி/கல்லூரிகளுக்கு வருகின்றனர். அப்படி இருக்க ஒரே ஒரு தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் அவர்களின் தகுதியாகிவிடுமா? அம்மா அப்பா திட்டுவார்கள் என்று நல்ல மதிப்பெண் எடுப்பவர்களே இங்கு அதிகம். இந்தப் படிப்பை நீ படித்தால்தான் எனக்கு கெளரவம் என்று பெற்றோர் தரும் உளவியல் அழுத்தத்தால் மதிப்பெண்களைக் குறிவைத்துப் படிப்பவர்களும் ஏராளம். பந்தயக்குதிரை போல வெறும் முதலிடத்தை இலக்காக வைத்துப் படிப்பவர்களும் உண்டு. இவர்களில் யாருமே ஒரு நல்ல மருத்துவராகவோ, நல்ல பொறியாளராகவோ, நல்ல ஆசிரியராகவோ ஏன் நல்ல மனிதனாகவோகூடத் தகுதியற்றவர்கள்.

ஓட்டுக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்றவுடன் செலவு செய்த காசை மீட்டெடுக்க ஊழல் செய்யும் அரசியல்வாதிபோல, சிறப்புவகுப்புகளுக்கும் (ட்யூஷன்), பயிற்சி வகுப்புகளுக்கும் பல லட்சம் கட்டிப் படித்தவன் பட்டம் வாங்கியவுடன் வெளிநாட்டுக்குப் பறக்கவோ, பெருநகரங்களில் செல்வம் கொழிக்கும் மருத்துவமனைகளில் பணிபுரியவோ, மருத்துக் கம்பெனிகளின் லாப வெறிக்குத் துணைபோகவோ, உடல் உறுப்புகளைத் திருடி விற்கவோ மாட்டான் என்று எப்படி நம்புவது?

அதுவே சிறுவயதுமுதல் ஆசையின் காரணமாகவோ, ஆர்வத்தின் காரணமாகவோ, அனுபவத்தின் காரணமாகவோ ஒரு துறை மீது ஈடுபாடு வந்து, அதனால் அந்தத் துறையில் படிக்க விரும்பும் ஒருவனுக்கு வாய்ப்புக்கொடுப்பதே சரியானதாக இருக்கும். இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட எத்தனையோ அறிவாளிகள் இன்று கிடைத்ததைப் படித்துவிட்டு வேண்டாவெறுப்பாக வேலைபார்க்கிறார்கள். இதுதான் ஆர்வத்திற்கு திறமைக்கும் கிடைக்கும் மரியாதையா? பள்ளிகளில் சுமாராகப் படிப்பவர்கள் கல்லூரிகளில் நன்றாகக் படிப்பதும் இதுவே தலைகீழாக நடப்பதும் யாரும் அறியாததல்ல. அப்படி இருக்க 8.5 லட்சம் பேர் எழுதும் தேர்வில், மாநில அளவில் முதல் 1000 இடங்கள் எடுத்தால் மட்டுமே நல்ல கல்லூரிகளில் நினைத்த துறையில் கல்வி என்றால் இதுவே ஒரு வக்கிரமான அமைப்பு இல்லையா?

ஆகவே விருப்பம் இருப்பவன் விரும்பும் படிப்பைப் படிக்க வகைசெய்ய வேண்டும். "இதனால் எல்லோரும் மருத்துவம் படித்துவிடுவார்கள்" என்று நினைக்கிறீர்களா? அதுவும் நடக்கலாம். ஆனால் அதைத் தடுக்க ஒரு வழியுண்டு. எல்லா வேலைகளுக்கும் இருக்கும் வருமான இடைவெளியை (pay gap) நீக்குவதன் மூலம், "இந்தப் படிப்பு படித்தால் நிறய சம்பாதிக்கலாம்" என்ற எண்ணம் முதலில் நீக்கப்பட வேண்டும். இதுவே எல்லாப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம். இதைச் சொன்னால் நம்மை கம்ம்யூனிஸ்ட் என்பார்கள். ஆனால் இதுபோன்ற சமதர்மம் நிலவும் நாடுகளுக்கு ஆன்சைட் கிடைக்காதா என்று காத்துக்கிடக்கும் மேன்மக்களே இங்கு அதே சமதர்மம் வரக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார்கள்.

சரி, தற்போதுள்ள முதலாளித்துவ முறையில்கூட இது எப்படி இயங்கும்? எல்லோரும் மருத்துவமோ, பொறியியலோ படித்தாலும் பெரிதாக ஒன்றும் இழப்பு ஏற்படாது. தெருவுக்குத் தெரு மருத்துவர்களும் பொறியாளர்களும் வேலை இல்லாமல் வீட்டில் இருப்பார்கள். நாளடைவில் தானாக எந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு இருகிறோதோ அந்தத் துறையில் அதிக மாணவர்கள் சேர்வார்கள். இதைத்தானே நீங்கள் "Free Market Capitalism" என்று பீத்துகிறீர்கள்? அதைக் கல்வியிலும் கொண்டுவரலாமே? வேண்டிய படிப்புகளை வேண்டியவர்கள் படிக்கட்டும். அவர்கள் பார்க்கும் வேலையின் தரத்தைப் பொறுத்து அவர்கள் தொழில் முன்னேற்றம் இருக்கட்டும்! வாய்ப்பு மறுக்கப்படுவதுதான் உங்கள் "Free Market Capitalism" லட்சணமா?

எதற்க்கெடுத்தாலும்  "survival of the fittest" என்று டார்வீனியாக் கோட்பாடு பேசுகிறார்கள். நான் பரிணாமக் கோட்பாட்டை நன்றாகக் படித்தவன். "Survival of the fittest"-க்கு இவர்கள் சொல்லும் விளக்கம் எந்த நூலிலும் இல்லை. என்னவேண்டுமானாலும் செய்து எப்படியும் தான் ஆசையை நிறைவேற்றிக்கொள்வது "survival of the fittest" இல்லை. அதற்குப் பெயர் "unethical cut-throat competition". முதலாளித்துவமும் இங்கு நிலவும் சாதிய சமூகமும் உருவாக்கியுள்ள இந்த மனநோயைத்தான் இவர்கள் "survival of the fittest" என்று பூசி மொழுகுகிறார்கள்.

அனிதாவின் பெயரைக் குறிப்பிடாமல் என்னால் கடந்துசெல்ல முடியவில்லை. 1176 எடுத்த காரணத்தால் அல்ல. அனிதா 800 மதிப்பெண் எடுத்திருந்தாலும் அவர் மருத்துவர் ஆக எல்லாத் தகுதியும் பெற்ற ஒருவர். எப்படி? மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மருத்துவத்திற்கு காசில்லாமல் தன் தாயைப் பறிகொடுத்த அனிதாவைவிட யார் மருத்துவராகத் தகுதி உள்ளது? அவர் மருத்துவர் ஆகியிருந்தால் எல்லோருக்கும் இலவச சேவை செய்வார் என்று சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக காசு கொடுத்து இடம் பிடித்த "survival of the fittest"களைக் காட்டிலும் கருணையும், சமூக அக்கறையும் உள்ள மருத்துவராக இருந்திருப்பார். அது எவரும் மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கு வேண்டுமானால் பெரிய பெரிய மருத்துவமனைகளில் பெரிய பெரிய தகுதித் தேர்வுகள் எழுதிவந்த மருத்துவர்கள் தேவைப்படலாம். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு அனிதாவைப் போன்ற மனசாட்சியுள்ள, எல்லா நோயாளிகளையும் மறைந்த தன் தாயாகப் பார்க்கும் மருத்துவர்களே தேவை. அப்படிப்பட்ட மருத்துவர்களை உருவாக்கமுடியாத சமூகம்தான் தூக்கில் தொங்கவேண்டும்.

முடிவாக
  • நீட் விலக்குப் பெறுதல் தாற்காலிகத் தீர்வு.
  • நீட்டை நீக்குவது குறுகிய காலத் தீர்வு.
  • விரும்பியவர் விரும்பிய படிப்பை விலையில்லாமல் படிக்கவும், தொழில்களிடையேயும் தொழிலாரகளிடமும் சமத்துவமும் சமநீதியும் நிலவ வழிசெய்யும் பொதுவுடைமைச் சமூகம் படைப்பதே நிரந்தரத் தீர்வு!

Wednesday, August 30, 2017

சோவியத் ஒன்றியம் என்ன கிழித்தது?

சோவியத் ஒன்றியம் வீழ்ந்துவிட்டதால் பொதுவுடைமைச் சித்தாந்தமே வீழ்ந்துவிட்டதாக பெரும்பான்மையானோர் கருதுகிறார்கள். ஒரே ஒரு நடைமுறை அமலாக்கம் தோல்வியுற்றதால் அந்த கருத்தாக்கமே தோல்வியடைந்துவிட்டதாக முடிவுகட்டிவிடலாமா? அப்படிப் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பொருளாதார வீழ்ச்சிகள், தாராளமயம்/உலகமயம் அறிமுகமாகிய சில காலத்திலேயே வறுமையிலும், குளறுபடிகளிலும் சிக்கும் எண்ணற்ற நாடுகள் போன்றவை முதலாளித்துவத்தின் தோல்வி என்று ஏன் நாம் எடுத்துக்கொள்வதில்லை? வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுகிறது என்றால் பரவாயில்லை. சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளும் திரித்துக்கூறப்படுவது சரியா? நாம் ஒன்றும் சில நூற்றாண்டுகளோ பல ஆயிரம் ஆண்டுகளோ முந்தைய பழைய வரலாற்றைப் பற்றி பேசவில்லை. இன்று 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பிறந்தபோது சோவியத் ஒன்றியம் உயிரோடு இருந்தது. வெறும் 25 ஆண்டுகள்... நம் அம்மா அப்பா, தாத்தா பாட்டி என்று எல்லோரும் பார்த்து, கோட்டு, வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டன? பொதுப்புத்தியில் இருந்தே அழித்தொழிக்கப் பட்டுவிட்டதே?

வணிகவியல், பொருளாதாரம் போன்ற பட்டப் படிப்பு படித்தவர்களிடம்கூடக் கேளுங்கள், "பங்குச் சந்தையே இல்லாமல் அவ்வளவு பெரிய பொருளாதாரம் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் பல சோதனைகளைக் கடந்து பற்பல  சாதனைகளைப் புரிந்து வெற்றிநடை போட்டது அவர்கள் பாடத்தில் உண்டா?" என்று. பலருக்கு அது தெரியவே தெரியாது. சிலர் சோவியத் ஒன்றியத்தை நேரடியாக அமெரிக்காவோடோ, ஐரோப்பிய நாடுகளோடோ ஒப்பிட்டு அதன் சாதனைகளை சிறுமைப்படுத்துவதும் உண்டு. அமெரிக்கா போல அடிமைகளின் உழைப்புச் சுரண்டலோ, ஐரோப்பிய நாடுகள் போல காலனிய ஏகாதிபத்தியச் சுரண்டலோ இல்லாமல் வெறும் 75 வருடம் நடந்த பொதுவுடைமை ஆட்சியை பலநூறு ஆண்டுகளாக அடாவடி ஆட்சி புரிந்த நாடுகளுடன் ஒப்பிடுவதா? இதுதான் கல்வி அவர்களுக்குக் கொடுக்கும் புரிதலா?

"ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். சோவியத் மக்கள் பஞ்சம் பட்டினியில் செத்தார்கள். அங்கு சுதந்திரமே கிடையாது." என்பன போன்ற பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. அவற்றை எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை. ஒரு பொருளாதார சக்தியாக சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள் என்ன? 1917ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் போது, விவசாயக் கூலிகள் பெரும்பான்மையாக வாழ்ந்த, தொழில் புரட்சிக்கு முற்பட்ட, கல்வி அறிவு, மின்சாரம் போன்ற எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு மன்னராட்சி நாடகத் தொடங்கிய இவ்வொன்றியம் என்னவெல்லாம் சாதித்தது என்று பார்ப்போம்.

1. அனைவருக்கும் உணவு உறுதிப்படுத்தப் பட்டது. இன்றும் கூட இதுபோன்ற ஒரு உத்திரவாதம் வளர்ந்தநாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில்கூட இல்லை!

2. மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் விலையில்லாமல் கொடுக்கப்பட்டது.
3. அனைவருக்கும் கல்வி உறுதிசெய்யப்பட்டது. கட்டாய, விலையில்லா கல்வி, வயது, இனம், மதம் மற்றும் பாலின வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் சென்றடைந்தது.

4. உலக அளவில் பெரிய அம்மை நோய் ஒழிப்பில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிகப் பெரியது.
5. உலகிலேயே அதிக புத்தகங்களை அச்சிட்ட நாடு. உலகின் மீத எல்லா நாடுகளும் அச்சிட்ட அளவை விட அதிக நூல்களை அச்சிட்ட பெருமை சோவியத் ஒன்றியத்தைச் சேரும். உலக மொழிகள் பலவற்றிலும் நல்ல நூல்களை தயாரித்து மலிவு விலையில் ஏற்றுமதியும் செய்தது. தமிழில்கூட பல நூல்கள் வெளியிடப்பட்டன.

6. 15% மக்கள்தொகை வளர்ச்சி இருந்த காலத்தில் 55% தொழில் வல்லுநர்கள் வளர்ச்சியை எட்டியது.
7. இசை மற்றும் இதர கலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. பெரும்பான்மை மக்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.

8. வணிகமயமாக்கப்படாத கல்வி, பொழுதுபோக்கு, தொலைகாட்சி போன்றவை மக்களிடமும் இளைய தலைமுறையினரிடமும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துச் சென்றன.
9. அனைவருக்கும் விலையில்லா, தரமான மருத்துவம் கொடுத்த முதல் நாடும் இதுவே!

10. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் உறுதிசெய்யப்பட்டது.
11. பெண்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் பங்கேற்க இருந்த தடைகள் தகர்க்கப்பட்டன.

12. உடல் உறுப்புகள் தானம்/மாற்று அறுவைசிகிச்சைகள் முதலில் வந்ததும் இங்குதான்.
13. புரட்சிக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது சராசரி ஆயுள்காலம் இரட்டிப்பானது.

14. குழந்தைகள் இறப்பு விகிதம் பத்தில் ஒரு பங்காகக் குறைந்தது.
15. 1972க்குள் 4,84,000 மருத்துவர்கள் மற்றும் 22,24,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் என்று மருத்டுவத்துறை அபரீத வளர்ச்சி அடைந்தது.

16. பல்வேறு இன, மத, மொழி மற்றும் கலாச்சாரப் பிரிவுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவியது.
17. இன்று ஐரோப்பியர்கள் நிம்மதியாக இருப்பதற்கு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க காலனிகளில் இருந்து வந்து இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்ட வீரர்கள் காரணம். அதுபோல உலகையே அச்சுறுத்திய நாஜி ஜெர்மனியை வீழ்த்த சோவியத் வீர்கள் செய்த தியாகமும் மிகப் பெரியது. கிட்டத்தட்ட 2 கோடி உயிர்களை தியாகம் செய்து ஹிட்லரை வீழ்த்தியது.

18. இந்த பொதுவுடைமை சமுதாயத்தை முளையிலேயே கிள்ளி எரித்துவிட 14 முதலாத்துவ நாடுகள் ஒன்றுதிரண்டு போர்தொடுத்தன. மேலும் உள்நாட்டு சாதிகளும் செய்யப்பட்டன. ஆனால் எல்லாவற்றையும் முறியடித்து சுயமாக முன்னேறி வந்தது சோவியத் ஒன்றியம்.
19. மின்சார  ரயில்,அணுமின் நிலையங்கள், பெரிய அணைகள், பசுமைப் புரட்சி, பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் என்று 5 ஆண்டுத் திட்டங்கள் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

20. வெறும் 40 வருடங்களில் குதிரை வண்டிகளில் போய்க்கொண்டிருந்த மன்னராட்சி, விண்வெளியை எட்டிப்பிடித்த மக்களாட்சியாக மாறியது. சோவியத் விண்வெளியில் செய்த சாதனைகள் தனிப் பதிவாகவே போடவேண்டும்! [இங்கே படிக்கவும்]

இப்போது சொல்லுங்கள். வெறும் 75 ஆண்டுகள்கூட முழுதாக இல்லாத இந்த பொதுவுடைமை கூட்டமைப்பின் சாதனைகள் நாம் எளிதில் கடந்துசெல்லக்கூடியாவைகளா?

நன்றி: http://www.northstarcompass.org

விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள்

1957: முதல் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - ஆர் 7 செம்யோர்க்கா
1957: முதல் புவியை சுற்றும் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக் 1
1957: விண்வெளியில் முதல் உயிரினம் - லைக்கா (நாய்) - ஸ்புட்னிக் 2
1959: புவியின் ஈர்ப்பைத் தாண்டிய முதல் ஏவுகணை - லூனா 1
1959: புவியிலிருந்து விண்வெளிக்கு நடந்த முதல் தொலைத்தொடர்பு - லூனா 1
1959: நிலவின் அருகில் சென்ற முதல் செயற்கைக்கோள் - லூனா 1
1959: நிலவில் இறங்கிய முதல் விண்கலம் - லூனா 2
1959: நிலவின் பின்புறத்தை ஆராய்ந்த முதல் செயற்கைக்கோள் - லூனா 3
1960: செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட முதல் விண்கலம் - மார்ஸ்னிக் 1
1961: வெள்ளியை நோக்கி ஏவப்பட்ட முதல் விண்கலம் - வெனீரா 1
1961: விண்வெளியில் முதல் மனிதன் - யூரி ககாரின்- வோஸ்டோக் 1
1961: ஒருநாள் முழுவதும் விண்வெளியில் சுற்றிய முதல் மனிதன் - கெர்மன் டிடோவ் - வோஸ்டோக் 2
1962: ஒரே சமயத்தில் இரு விண்வெளி வீரர்கள் - வோஸ்டோக் 3 மற்றும் வோஸ்டோக் 4
1963: விண்வெளியில் முதல் பெண் - வாலெண்டின டெரெஷ்கோவ் - வோஸ்டோக் 6
1964: மூன்று விண்வெளி வீரர்கள் ஒரே கலத்தில் - வோஸ்கோத் 1
1965: முதல் விண்வெளி நடை - அலெக்சி லியோனோவ் - வோஸ்கோத் 2
1965: வேறு கோளை அடைந்த முதல் விண்கலம் - வெனீரா 3
1966: நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம் - லூனா 9
1966: நிலவன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட முதல் கலம் - லூனா 10
1967: ஆளில்லா விண்கலங்கள் சந்திப்பு - காஸ்மோஸ் 186 & காஸ்மோஸ் 188
1969: இரு விண்கலங்கள் சந்தித்து அதில் இருந்த மனிதர்கள் இடம் மாறியது - சோயூஸ் 4 & சோயூஸ் 5
1970: புவியில் இருந்து நிலவுக்கு முதல் தகவல் அனுப்பப்பட்டது - லூனா 16
1970: நிலவில் முதல் நகரும் கலம் - லூனாகோத் 1
1970: வேறு கோளில் இருந்து வந்த முதல் தகவல் - வெனீரா 7
1971: முதல் விண்வெளி நிலையம் - சல்யூட் 1
1971: செவ்வாயைச் சுற்றிய மற்றும் தரை இறங்கிய முதல்  விண்கலம் - மார்ஸ் 2
1984: விண்வெளியில் நடந்த முதல் பெண் - ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா - சல்யூட் 7
1986: இரு விண்வெளி நிலையங்களுக்குச் சென்ற முதல் குழு - சல்யூட் & மிர் (7 நபர்கள்)
1986: முதல் நிரந்தர விண்வெளி ஆய்வு நிலையம் - மிர் 1986 - 2001
1987: ஒருவருடத்திற்கு மேல் விண்வவெளியில் கழித்த முதல் குழு - விளாடிமிர் டிடோவ் & மூஸா மனரோவ் - மிர்

நன்றி: விக்கிபீடியா, http://www.northstarcompass.org

Friday, August 11, 2017

"துளிர்"க்கட்டும் அறிவியல் ஆர்வம்

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவரும் அறிவியல் ஆர்வம் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சமூக வலைத்தளங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சு ஊடகங்களாகட்டும், எங்கு திரும்பினாலும் போலி அறிவியலின் தாக்குதல் எட்டுத்திக்கும் இருந்து சீறிப்பாய்கிறது. திரைப்படங்களைச் சொல்லவே வேண்டாம். "மனிதனின் சராசரி ஆயுள்காலம் 300 வருடம்" என்றெல்லாம் வசனம் பேசி கைதட்டலும் காசும் சம்பாதித்துவிட்டு அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள், பார்க்கும் நம் மக்களோ அறிவைத்தொலைத்துவிட்டு மூடமயக்கத்தில் தடுமாறுகிறார்கள். அறிவியல் பற்றிய பத்திரிக்கைகள் வெகு சிலவே கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை விலை அதிகமுள்ளவையாகவும், ஆங்கிலப் பாதிப்புகளாகவும் உள்ளன. தமிழில் ஒரு நல்ல அறிவியல் பத்திரிகை இருந்தால்? அதுவும் அது குறைந்தவிலையில் எல்லோரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் இருந்தால்? எவ்வளவு நன்றாக இருக்கும்?
அப்படி ஒரு மாத இதழ் இருக்கிறது! தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் இணைந்து வெளியிடும் இந்த மாத இதழ், "துளிர்" என்ற பெயரில் வெளிவருகிறது. இதழ் ஒன்றுக்கு 10 ரூபாய் என்கிற நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது. வெறும் 100 ரூபாய் சந்தா செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் உங்கள் வீடு தேடியே வரும்! சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் பார்க்க இதைவிட அதிகம் செலவாகும். ஒரு சின்ன பொம்மை இதைவிட அதிக விலை இருக்கும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ, அல்லது உங்கள் உறவினர்/நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ ஒருவருட சந்தாவைக் கட்டி அவர்கள் வீடுதேடி இவ்விதழ் மாதம்தோறும் வரும்வகையில் ஒரு அன்பளிப்பைத் தரலாம். நீங்களும் இவ்விதழை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் உங்கள் அறிவியல் அறிவை கூர்மையாக வைத்துக்கொள்ளலாம்.

பள்ளியில் படிக்கும் அறிவியல் கருத்துக்கள் சரியாகப் புரியாமலோ அல்லது அறிவியல் ஆர்வத்தின் மிகுதியிலோ குழந்தைகள் எழுப்பும் கேள்விகள் ஏராளம். ஆனால் பொறியியலோ மருத்துவமோ பயின்ற பெற்றோர்கள்கூட அக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் தடுமாறும் நிலையில் உள்ளனர். இதுவே அவர்களிடம் ஏதாவது மூடநம்பிக்கைகள் குறித்துக் கேட்டுப் பாருங்கள்? பக்கம் பக்கமாக விளக்குவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் துளிர் இதழ் இருந்தால், நீங்களும் உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு இளைய தலைமுறைக்கும் பயன்படும் வகையில் அதைப் பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள்கூட தங்கள் ஓய்வு நேரத்தில் "துளிர்" இதழை வாசித்து, அதில் உள்ள தகவல்களை எளிய கதைகளாக குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

துளிர் அறிவியல் மாத இதழை உங்கள் வீட்டிற்கே வரவழைக்க, கீழ்காணும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.

முகவரி:

துளிர் நிர்வாக அலுவலகம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை 600 086

தொலைப்பேசி எண்: 044 28113630

மின்னஞ்சல் முகவரி: thulirmagazine@gmail.com

சந்தா விவரங்கள்:
ஒரு இதழ்: ரூ. 10/-
ஆண்டுச் சந்தா: ரூ. 100/-
ஆண்டுச் சந்தா (வெளிநாடுகளுக்கு): $ 20
ஆயுள்ச் சந்தா: ரூ. 1000/-

Wednesday, August 9, 2017

வந்தேறிச் செடிகள்!

இன்று எல்லாப் பொருட்களிலும் பழமை நல்லது, புதுமை கெட்டது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்போ, உணவோ, மருந்தோ, உடையோ வந்தால் போதும்! "ஐயோ! நம் முன்னோர்கள் பாரம்பரியம் எல்லாம் போச்சே! பழமையை அழித்துவிட்டோமே! புதியவற்றால் தீமைகள்தான் வரும்!" என்றெல்லாம் முட்டி மோதும் கூட்டம் எங்கிருந்தாவது கிளம்பிவருகிறது. இவர்கள் கூற்றின் படி, நம் முன்னோர்களும் புதுமைகளை ஏற்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்?

வேட்டையாடிய மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது இதேபோல "நம் முன்னோர்கள் விவசாயம் செய்யவில்லை. விவசாயத்தால் காடுகள் அழியும். அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவை. இவற்றை உண்டால் நோய் வரும்!" என்றெல்லாம் போராட்டம் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அல்லது நெருப்பை மூட்ட மனிதன் கற்ற காலத்தில், "நெருப்பு ஆபத்தானது! அதை நம் வீட்டுக்குள் கொண்டு வருவது கூடாது! அதனால் காற்று மாசு படுகிறது!" என்று ஒரு கூட்டம் கோஷம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? இப்படியே சக்கரம், படகுகள், ஆடை, சமைத்த உணவு, உணவில் உப்பு சேர்ப்பது போன்ற ஒவ்வொரு மாற்றத்தையும் பழமைவாதிகள் எதிர்த்திருந்தால் நாம் இன்று மகிழ்ச்சியாக மரத்தில் தாவிக்கொண்டு இருந்திருக்கலாம்!

இப்படிப் பழம்பெருமை பேசும் பலருக்கும், நம் முன்னோர்கள் புதுமையை வரவேற்று ஏற்றுக்கொண்டு முன்னேறியவர்கள் என்பது தெரியாது. இன்று அவர்கள் பழமை என்று தூக்கிப்பிடிக்கும் பலவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் புதுமையாக நம் முன்னோர்கள் பார்த்தவையே! "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!" என்ற இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், நம் முனோர்களைப் போல நாமும் புதுமையைக் கண்டு அஞ்சாமல், அதை ஆராய்ந்து ஏற்பதே நல்லது.

அவ்வகையில் நம் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொண்ட புதுமைகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்தப் புதுமைகள் இன்று எவ்வாறு பழமைகளாகப் பார்க்கப்படுகின்றன என்று கவனியுங்கள். ஒரு குறுகிய வலைப்பதிவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாததால், 1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்க கண்டங்களைக் கண்டறிந்த பின், அக்கண்டங்களில் இருந்து ஐரோப்பியர்கள் மூலம் நம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சில தாவர வகைகளை மட்டும் பார்ப்போம். அதாவது, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தாவரங்களோ அவை தரும் காய்கனிகளோ, நம் முன்னோர்கள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள பலவும் இன்று நம் "பண்பாடு, பாரம்பரியம், மரபு" வட்டத்துக்குள் இருப்பதைக் கவனியுங்கள். இன்னும் 500 வருடங்களில், பிட்சாவும், நூடுல்சும் நம் பரம்பரியமானாலும் வியப்பதற்கல்ல!

குடை மிளகாய் - சில்லி சிக்கன் முதல் பச்சடி வரை...

முந்திரிப்பருப்பு - இது இன்று நம் பாரம்பரிய உணவாகப் பார்க்கப்படும் ஒன்று. முந்திரி பக்கோடா, முந்திரி அல்வா, முந்திரி ஸ்வீட், பொங்கல், லட்டு, பாயசம்,புலவு என்று நம் பாரம்பரிய உணவுகள் பலவும் முந்திரியால் சிறப்புப் பெறுகின்றன. "முந்திரிக்கொட்டை போல" என்ற வழக்கும்கூட நம் மொழியில் இருப்பது வியப்பே!

மிளகாய் - மீன்குழம்பு, சாம்பார், சட்டினி, வடை, இட்டிலிப் பொடி இப்படி எது எடுத்தாலும் மிளகாய்ப் பொடி இல்லாமல் ருசிக்குமா? ஒருநாள் உங்கள் சமையலறையில் மிளகாய்ப் பொடி டப்பாவை ஒளித்துவைத்துவிட்டு சமையல் செய்ய முயலுங்கள். நீங்கள் தமிழரின் பாரமபரிய உணவுகள் என்று நம்பும் பலவும் இந்த அமெரிக்க இறக்குமதி இல்லாமல் சமைக்க முடியாது! இதில் இந்த மிளகையைக் கொண்டு திருஷ்டி கழிப்பது, வாகனங்களைப் பாதுகாப்பது போன்ற விஞானங்கள் வேறு! 500 வருடங்களுக்கு முன் இல்லாத இந்தப் பழக்கங்கள் இன்று நம் பண்பாடு என்று சொல்லும் மனிதர்களை என்னவென்பது?

சீதா/ராமன்-சீதா பழம் - பெயரளவில் நம் நாட்டு இதிகாசங்களின் தாக்கம் இருந்தாலும் இதுவும் வெறும் 500 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியானதே!

கொய்யாப் பழம் - நம் ஊர்களில் பாட்டிகள் கூடை தூக்கி விற்பார்களே! அதேதான். அதுவும் அமெரிக்க இறக்குமதியே!

மக்காச் சோளம் - இரும்புச் சோளம் மற்றும் இதர சோளங்கள் ஏற்கனவே இருந்தாலும், மக்காச் சோளம் புதுவரவே! இதில் நாட்டு மக்காச் சோளம், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் என்று நாம் வகை பிரித்தாலும் இரண்டுமே அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையே!

மரவள்ளிக் கிழங்கு - கிராமிய உணவாகப் பார்க்கப்படும் இதுவும் சில நூற்றாண்டுகளாக இங்கு வந்தேறிய பயிர்!

பப்பாளி - மெக்சிக்கோ நாட்டைத் தாயமாகக் கொண்ட மரம். இந்த மரத்தின் இலைச்சாறு டெங்குவைக் குணப்படுத்தும் என்று அரசாங்கமே விளம்பரம் போடுகிறது. ஆனால் இதன் தாயகமான மெக்சிக்கோவிலோ டெங்குவிற்கு தடுப்பூசி போடுகிறார்கள்!  இதைச் சிலர் சித்த மருத்துவம் என்றுகூடச் சொல்கிறார்கள். எந்தச் சித்தர் எந்த நூலில் பப்பாளி பற்றிக் குறிப்பெழுதியுள்ளார்? சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.

நிலக் கடலை - கடலை போடுவது முதல் "பாரம்பரிய மரச்செக்கு கடலெண்ணெய்" வரை கடலை நம் உணவிலும் வாழ்விலும் கலந்த ஒன்று. ஆனால் ஒரு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இதைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை! கடலை மிட்டாய், கடலை எண்ணெய் பலகாரம் இதெல்லாம் நம் பாரம்பரியம் என்று நம்புபவர்கள் பலர். உண்மையில் இது சில நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட பயிரே!

அன்னாசிப் பழம் - எனக்கு மிகவும் பிடித்த பழம். தனியாக ஒரு முழு பழத்தைக் கூட சாப்பிட்ட நாட்கள் உண்டு! பிரேசில் நாட்டைத் தாயகமாக் கொண்டது இப்பழம்.

உருளைக்கிழங்கு - மற்றுமொரு "பாரம்பரியம்". பூரி கிழங்கு முதல் ஆலு பரோட்டா வரை! வட நாட்டின் உயிர் மூச்சான இந்த "ஆலு" அமெரிக்காவில் இருந்து வந்த "விதேசி" பயிர். அமெரிக்க விதேசி பயிரான உருளைக்கிழங்கைத் தடை செய்துவிட்டால் வடாஇந்தியர்கள் பாடு திண்டாட்டம்தான்!

பூசணி - பரங்கிக்காய் (வெள்ளைப் பூசணி ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது!)

சப்போட்டா - "சிக்கு" என்று வடஇந்தியர்களால் (வடஇந்தியத் தாக்கம் உள்ள தமிழர்களினாலும்) அறியப்படும் இப்பழம் மெக்சிகோ இறக்குமதி.

சூரியகாந்தி - எண்ணெய் வித்தாகப் பயன்படும் இப்பயிர் வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து வந்தது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பெயரைக்கேட்டால் தூய தமிழாகத்தான் உள்ளது... ஆனால் சொந்த ஊர் தென்-அமெரிக்கா.

புகையிலை - புகையிலைப் பாக்குகளைக் குதப்பி, அங்கங்கு துப்பி வைப்பது வடஇந்தியர்கள் நடமாடும் பகுதி என்பதன் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு நம் "கலாச்சாரத்தில்" கலந்தது இந்தப் புகையிலை. வெற்றிலையோடு புகையிலை போடும் பழக்கம் தமிழகத்திலும் இருந்தது (இன்னும் சிலரிடம் இருக்கிறது). எல்லாவற்றிற்கும் மேல், சில தெய்வங்களுக்கு சுருட்டு படைத்து வழிபாடும் வழக்கம் உள்ளது. இந்த எல்லா "பாரம்பரியங்களும்" வெள்ளைக்காரன் கொண்டுவந்த உயிர்கொல்லிப் புகையிலைமீது கட்டப்பட்டுள்ளது!

தக்காளி - கிலோ 120 ரூபாய் விற்றாலும் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் வங்கியில் கடன் வாங்கியாவது தக்காளி வாங்குகிறோம் அல்லவா? அந்தத் தக்காளியும் வெள்ளைக்காரன் கொண்டுவந்ததுதான். ரசம், சாம்பார், குழம்பு என்று நீக்கமற நம் உணவில் நிறைந்துள்ள தக்காளி நம் முன்னோர்களுக்கு ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தியபோது புதுமையாகவே இருந்திருக்கும்.

முன்பே கூறியது போல நாம் இயல்பாக நம் மரபு, பண்பாடு, பாரம்பரியம் என்றெல்லாம் நம்பும் பலவும் நம் முன்னோர்களுக்கு புதியவையாகவும் அந்நியமாகவும் இருந்தவையே! அவர்கள் நம்மைப்போல முன்னோர் பெருமை பேசி இந்தப் புதுமைகளை ஏற்காமல் விட்டிருந்தால் வத்தல் குழம்பும் வஞ்சிர மீன் வறுவலும் நம் உணவுகளாக இருந்திருக்காது! புதுமைகள் எல்லாமே தீமை என்று எண்ணி அஞ்சாமல் அவற்றில் நல்லவற்றை எடுத்து தீயவற்றைத் தவிர்ப்போம்!

Wednesday, August 2, 2017

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 8

நூலின் தலைப்பு: தி கிரேட்டெஸ்ட் ஷோ ஆன் எர்த் (The Greatest Show on Earth)
ஆசிரியர்: ரிச்சர்டு டாவ்கின்ஸ்
பக்கங்கள்: ~500
வெளியீடு: டிரான்ஸ்வேர்ல்டு வெளியீடு
மொழி: ஆங்கிலம்
விலை: ~ ரூ. 400/-
வயது: 15+
பொருள்: அறிவியல், உயிரியல், பரிணாமம்
"இவ்வுலக மேடையில் நாம் அனைவரும் நடிகர்கள்!" என்ற ஷேக்ஸ்பியர் கூற்றுப்படி, உலகிலேயே பல கோடி ஆண்டுகளாகத் தொடந்து நடந்துவரும் நாடகம் எது? அனைத்து உயிர்களாலும் கூட்டாக நடத்தப் படும் பரிணாமமே அது! அத்தகைய பரிணாமத்தை பாடத்தில் படிக்கும்போது நாம் புரிந்துகொள்வது கொஞ்சமே. அந்தப் புரிதலும் பெரும்பாலான நேரங்களில் தவறாகவே உள்ளது. ஆனால் மத வியாபாரமும் போலி அறிவியலும் மலிந்துள்ள இன்றைய சூழலில் பரிணாமக் கோட்பாடைச் சரியாகப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. இந்நூல் அந்த முக்கியமான பணியைச் செய்கிறது.

சுமார் 500 பக்கங்கள் நீளும் இந்நூல் சற்றுப் பெரியதுதான். மேலும் குறைந்தது 15 வயதாவது ஆனா அறிவியல் ஆர்வமுள்ளவர்கள் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் ஆர்வம் மற்றவர்களும், சிறுவயதினரும், பிறர் உதவியுடன் படிக்கலாம் அல்லது இந்நூலைப் படித்தவர்கள் அவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம். எளிய சோதனை விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் விரித்தல் மூலம் டாவ்கின்ஸ் அவர்கள் பரிணாமக் கோட்ப்பாட்டை முடிந்தவரை எளிமையாக நம் முன் வைக்கிறார். மேலும் இதனால் பரிணாமம் குறித்த சரியான புரிதல் நமக்கு கிடைக்கிறது (இது தான் மிக முக்கியமான சிறப்பம்சம்!).

English Summary:  

Book Title: The Greatest Show on Earth
Author: Richard Dawkins
Pages: ~500
Publisher: Transworld Publishers
Language: English
Price: ~ Rs. 400/-
Age Group: 15+ 
Category: Science, Biology, Evolution

Thursday, July 13, 2017

கிஷ் ஓட்டம்

நன்றி: விக்கிமீடியா
ஒரு நேர்மையான விவாதம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் உண்மைகள் வெளிவரவும் உதவும். ஆனால் இன்று தொலைக்காட்சிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி விவாதங்கள், சொற்கள் நிரம்பிய குப்பைத்தொட்டிகள் போலவே உள்ளன. "கிஷ் காலோப்" (Gish Gallop) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "கிஷ் ஓட்டம்" என்ற ஒரு தவறான தர்க்க முறை (logical fallacy) குறித்துப் இங்கு பார்ப்போம். டுவேன் டால்பெர்ட் கிஷ் (Duane Tolbert Gish) ஒரு உயிர்வேதி அறிஞர் (Biochemist) மற்றும் இளம் புவி படைப்புவாதி (Young Earth Creationist). இவர் பொதுவாகத் தான் பங்கெடுக்கும் உரையாடல்கள் மற்றும் சொற்போர்களில்  கையாண்ட தவறான விவாத முறையே இன்று அவர் பெயரில் வளங்கப்பட்டு வருகிறது.

கிஷ் ஓட்டம் என்றால் என்ன?

எவ்வளவுதான் படித்தவராக இருந்தாலும், எவ்வளவு நினைவுத்திறன் கொண்டவராயினும், எல்லோர் அறிவுக்கும் ஒரு எல்லை உண்டு. திடீர் என்று ஒரு மேடையில் பல்வேறு தொடர்பற்ற, பொருளற்ற வாதங்களை அடுக்கிக்கொண்டே போனால், முதலில் எதை மறுப்பது, சொல்லியதில் எது உண்மை எது பொய், எப்படி பல்வேறு வாதங்களை ஒரு பதில்கொண்டு மறுப்பது போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இதனால் அவர்கள் தடுமாறுவதோ, அல்லது முழுமையான விடை சொல்லாமல் போவதோ இயல்பே! இத்தகைய வகையில் விவாதத்தில் வென்றது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதுவே "கிஷ் ஓட்டம்" ஆகும்.

எடுத்துக்காட்டு

கிறிஸ்துமஸ் தாத்தா உண்டா இல்லையா என்று விவாதம் நடப்பதாக வைத்துக்கொள்வோம். வரலாறு மற்றும் அறிவியல் அறிஞர்களும், கிறித்துமஸ் தாத்தா உண்டு என்று நம்பும் சிறுவனும் பங்கெடுப்பதாகக் கொள்வோம். திடீர் என்று அந்தச் சிறுவன், "கிறித்துமஸ் தாத்தா இருப்பது, நாசா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், ஜான் வில்லியம்சன் எழுதிய 'வடதுருவ விசித்திரங்கள்' புத்தகத்தில் அவர் புகைப்படம் உள்ளது. சென்ற ஆண்டுகூட என் வீட்டிற்கு வந்து அவர் பரிசு கொடுத்தார். உலகில் என் போல 30 கோடி சிறுவர்கள் அவரை நம்புகின்றனர். நாங்கள் எல்லோரும் முட்டாள்களா, மயில் இறகு குட்டி போடும் பொது கிறிஸ்துமஸ் தாத்தா இருக்க முடியாத? அவர் தாத்தா என்பதால்தானே அவருக்கு தாடி இருக்கிறது? அதுவே அது பாட்டியாக இருந்தால் எப்படி தாடி இருக்கும்? தாடி வெள்ளையாய் இருப்பதே அவர் வயதான தாத்தா என்பதற்கு சான்று. இதுகூடப் புரியாமல் நீங்கள் எப்படி அறிஞர்கள்? 1932 வரை கிறிஸ்துமஸ் தாத்தா பச்சை சட்டைதான் போடுவார். பிறகு அது என் சிவப்பாக மாறியது என்று பெனெடிக் கிங்ஸ்லி என்ற வரலாற்று ஆய்வாளர் எழுதியுள்ளார்" என்று அடுக்கிக்கொண்டேய போகிறான்.
இப்போது நாம் எங்கிருந்து பதில் சொல்லத் தொடங்குவது? முதலில் அந்தச் சிறுவன் கூறியது போல ஆய்வாளர்களும், ஆய்வுகளும் உண்மையில் உள்ளனவா? அப்படி இருந்தாலும் அவை நம்பகத்தன்மை உள்ளனவா? இது உடனுக்குடன் அறியக்கூடியவை அன்று. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அந்த ஆய்வாளர்களும், ஆய்வுகளும் உண்மையாக உள்ளவையே என்று நிறுவும் சுமை (burden of proof) யாருக்கு உள்ளது? உண்மையில் அது அந்தச் சிறுவனின் பொறுப்பு. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஆய்வாளர்களும், ஆய்வுகளும் இல்லை என்று எதிர் அணி நிறுவ வேண்டும். மேலும் விவாதத்துக்குத் தொடர்பில்லாத கிறிஸ்துமஸ் தாத்தா ஆணா பெண்ணா, வயதானவரா இளைஞரா, அவரை எத்தனை சிறுவர்கள் நம்புகிறார்கள் போன்ற வாதங்களை முன்வைப்பதன் மூலம் விவாதம் திசைதிருப்பப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடையையோ அல்லது ஒரு சில சிறு விடைகளையோ சொல்லி எதிர்கொள்ள முடியாது. ஆனால, அந்த மேடையில் பெரிய விளக்கங்களோ, ஆய்வுகளோ, நூல் தேடல்களோ மேற்கொள்ள நேரமும் வாய்ப்பும் கிடையாது. ஆகவே எதிர் அணி பாடு திண்டாட்டம்தான்.

தாக்கம்

இது போன்ற "கிஷ் ஓட்டங்களை" சமயப் பரப்புரை மற்றும் ஆன்மீக வியபாரம் செய்யும் ஆட்களிடம் அதிகம் பார்க்கலாம். ஒரு மேடையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இவ்வாறு பேசுவதன் மூலம், தன் தரப்பு வாதங்கள் சரி போலவும், எதிர்தரப்பு அறியாமையில் மூழ்கியுள்ளது போலவும் காட்டிக்கொண்டு விவாதத்தில் வென்று விட்டது போல பெருமிதம் அடைகிறார்கள் இவ்ரகள். போலி அறிவியல் துணைகொண்டு பிழைப்பு நடத்தும் ஒட்டுன்னிகளும் இத்தகைய பேச்சுக்கள் மூலம் மக்களை முட்டாள்களாக்குகின்றனர். அரசியல்வாதிகளும்கூட இதற்க்கு விதிவிலக்கல்ல. அறிவு நாணயம் (intellectual honesty) அற்ற இதுபோன்ற நடவடிக்கைகளால் உண்மைகள் மறைக்கப்படுவதோடு பொய்கள் மக்களின் மனதில் நிலைநிறுத்தப்படுகின்றன.

என்ன செய்யலாம்?

இது எவ்வளவு பெரிய சமூகக்கேடு என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இனி விவாதங்களை கவனிக்கும்போது இவ்வாறான தவறான முறைகள் கையாளப்படுகின்றனவா என்று உற்றுநோக்குங்கள். இத்தகைய அறிவு நாணயமற்ற செயல்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாவே இருப்பர். அத்தகையவர்களை அடையாளம்கண்டு அவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பது நலம். எந்த ஒரு மேடை விவாதமோ, தொலைகாட்சி விவாதமோ, வலைத்தள கருத்துப்பதிவு (comment) சண்டைகளோ ஒரு அறிவுப்பூர்வமான முடிவுக்கு வர உதவாது. ஏனென்றால், அறிவு (அறிவியல்/அரசியல்/சமூகம்) என்பது பல ஆண்டுகள் கடின உழைப்பு, வாசிப்பு, கற்றல், புரிதல், ஆய்வுகள் என்று நெடிய வழிப் பயணம். ஒரு குறுகிய கால விவாதம்  அதைத் தீர்மானிக்க முடியாது. அதற்காக விவாதங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. அவற்றை வாழ்வியல் உண்மைகளாக நம்பவேண்டாம் என்று சொல்கிறேன்.

"அறிவியலில் தேரோடும் தெருக்கள் கிடையாது. அதன் செங்குத்தான வழிகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் ஒளிமயமான உச்சிகளை எட்டுகின்ற வாய்ப்பு கிடைக்கும்." -காரல் மார்க்ஸ்

Wednesday, July 5, 2017

தமிழை வளர்க்க என்ன செய்யலாம்? - 5 எளிய செயல்கள்

1. தமிழில் பேசுங்கள்/எழுதுங்கள்!

ஒரு மொழியின் உயிர்ப்பே அதை எவ்வளவு பேர் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், எழுதுகிறாரகள் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தது. நீங்கள் வீட்டிலும், பொதுவெளியிலும் தமிழிலேயே பேசுங்கள். நாளுக்கு நாள் உங்கள் பேச்சில் உள்ள பிறமொழிச் சொற்களைக் குறைக்க முயலுங்கள். "உதாரணமாக" --> "எடுத்துக்காட்டாக", "சேஞ்ச் இருக்கா?" --> "சில்லறை இருக்கா?", "மொசாம்பி ஜூஸ்" --> "சாத்துக்குடிச் சாறு". இப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழை பழக்கப்படுத்துங்கள். சில ஆண்டுகளுக்கு முன், கணினி, இணையம் போன்ற சொற்கள் சிலர் மட்டுமே அறிந்ததாக இருந்தன. இன்றோ பெரும்பான்மை தமிழர்களுக்கு இச்சொற்கள் பரிட்சயமானவை நன்கு தெரிந்தவை.

வங்கி சென்றால் தமிழில் படிவங்களைக் கேளுங்கள். வங்கி, அலைப்பேசி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குத் தமிழிலேயே பதிலளியுங்கள். அவர்கள் வேறு மொழி பேசினால், தமிழ் தெரிந்த ஒருவரைப் பேசச் சொல்லுமாறு கூறும் உரிமை நமக்குண்டு! இப்படி அதிக எண்ணிக்கையில் தமிழில் சேவைகள் பெறப்படும்போது, அவற்றின் அவசியம் அந்நிறுவனங்களுக்கும் புரியும். தமிழ் நூல்கள், செய்தித் தாள்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை அதிகம் படியுங்கள். தமிழுக்குச் சந்தை மதிப்பு அதிகரித்தால், தானாகப் பல நிறுவனங்கள் தமிழில் தங்கள் நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தளங்களை மொழிபெயர்த்து வெளியிடுவர்.

2. தமிழ்வழிக் கல்வி 

இது இன்றைய சூழலில் சற்று சிக்கலான செயலே! தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள் இன்னும் சற்று பின்தங்கி உள்ளது மறுக்கமுடியாதது. ஆகவே ஆங்கிலம் நமக்கு இந்த இடைவெளியை நிரப்ப அவசியமாகிறது. அதனால் நாம் கல்வியில் ஆங்கிலத்தை சேர்த்துக்கொள்வது தவறில்லை. தமிழ் என்று எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு அடைகிறதோ, அன்று ஆங்கிலத்தை நாம் அடியோடு நிறுத்திவிடலாம். எப்படி நீச்சல் கற்கச் சுரைக்குடுக்கை உதவுகிறதோ, அதுபோல! அதுவரை ஆங்கிலத்தை அளவோடு கற்போம். ஆங்கிலத்தை இப்படித் தேவைக்குக் கற்றாலும், அதை ஒரு பெருமையாக எண்ணாமல் இருப்பது அவசியம்.


குழந்தைகளுக்கு நாம் ஏன் ஆங்கிலம் கற்கிறோம் என்று சொல்லுங்கள். ஆங்கிலம், அறிவின் அடையாளமோ, நாகரீகத்தின் குறியீடோ இல்லை. மாறாக அது நாம் இழந்த அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றங்களை அடைய உதவும் பாலம் மட்டுமே என்று விளங்க வையுங்கள். இவ்வாறு நாம் தமிழில் மட்டும் எல்லாப் பாடங்களையும் கற்கும் நாளுக்கு அவர்களை ஆயத்தப் படுத்துங்கள். இன்னும் சில தலைமுறைகளில் அது நடக்கும். ஆங்கிலேயர் நம்மை சில காலம் ஆண்டதாலும், ஆங்கிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மொழி என்பதாலும் மட்டுமே ஆங்கிலம் தேவையாகிறது. இந்தி, ப்ரெஞ்சு, ஜெர்மன், சமஸ்க்ருதம் போன்ற மொழிகள் மேற்கூறிய வகையில் நமக்கு உதவாதவைகள்.

3. சமூக வலைத்தளங்களில் தமிழ்

இன்று சமூக வலைத்தங்கள் அனைவரையும் தங்களின் வலையில் சிக்கவைத்துள்ளன. இதையே ஒரு வாய்ப்பாக நாம் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் கைப்பேசி வாங்கும்போதே அதில் தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அல்லது செயலிகள் மூலம் உங்கள் கைப்பேசியில் தமிழ் உள்ளீடு செய்ய முடியுமா என்று பாருங்கள். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களிலும் தமிழிலேயே உள்ளீடு செய்யுங்கள். வலைப்பூக்கள், யூட்யூப் போன்ற காணொளித் தளங்கள், மற்றும் இதர வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பகிரும்போது தமிழில் பகிருங்கள்.

தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பாருங்கள்

இதன் மூலம் தமிழின் இணைய ஊடுருவல் அதிகரித்து பன்னாட்டு நிறுவனங்களும் சந்தையைப் பிடிக்க தமிழ் மொழியில் சேவைகளை மேம்படுத்த முற்பட வாய்ப்புள்ளது. மேலும் கைய்ப்பேசி நிறுவனங்களும் தமிழ் மொழி உள்ளீடு உள்ள கருவிகளை அதிகம் தயாரிக்க இது ஒரு உந்துதலாக இருக்கும். கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது சற்று கடினமே. ஆனால், கைப்பேசிகள் இன்று இதை எளிதாக்கியுள்ளன. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இணையத்தில் தமிழை அரியணை ஏற்றுவோம்!

4. மொழிபெயருங்கள்

விக்கிபீடியா, ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் போன்ற கட்டற்ற கலைக்களஞ்சியங்கள் மற்றும் மின்-நூலகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். மேலும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் உதவிக் கோப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். இதன் மூலம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணினி மற்றும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நீங்கள் உதவலாம்.


கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைக் காலச் செயல்பாடாக இதுபோன்ற மொழிபெயப்புப் பணிகளை கல்லூரிகள் வழங்கலாம். மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு விடுமுறையில் விக்கிப்பீடியாவில் உள்ள மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் ஒன்றையோ இரண்டையோ மொழிபெயர்த்தால் சில ஆண்டுகளில், எந்த அளவுக்கு நாம் மருத்துவ அறிவைத் தமிழுக்கு இறக்குமதி செய்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். இப்படியே  வரலாறு, தொல்லியல், உயிரியல், வேதியல், கணிதம், பொறியியல் என்று பலவேறு துறை மாணவர்களும் ஆளுக்கு ஒன்றாகத் தங்கள் தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? சிந்தியுங்கள்!

5. புதிய கலைச்சொற்களை கற்றல்/உருவாக்குதல் 

எல்லாவற்றிற்கும் காரணப்பெயர்களா?
(நகைப்புக்காக மாற்றப்பட்ட படம்!)
இது இன்றியமையாத ஒன்று. ஒரு உயிருள்ள மொழி, வளர்ந்துகொண்டே இருக்கும். அகவே, தமிழ் மொழி வளர்வதற்கு அதற்க்குப் புதிய சொற்கள் தேவை. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் ஏராளம். அவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் உருவாக வேண்டும். எல்லாவற்றையும் காரணப்பெயர்களாக மட்டும் வைப்பது சற்றே கடினமான ஒன்று. மிக நீண்ட மற்றும் நகைப்புக்குரிய வகையில் காரணப்பெயர்களை வைப்பதைவிட, சற்று சிறிய, மனதில் நிற்கக்கூடிய எளிய சொற்களை உருவாக்குவதும் இன்றைய தேவை! இச்சொற்களை உருவாக்குவது மொழியியல் வல்லுனர்களின் வேலை! இவ்வாறு உருவான சொற்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது, அனைவரது கடமை! ஆகவே உங்கள் ஆர்வத்திற்கேற்ப இவ்வகையிலும் நீங்கள் உதவலாம்!

Tuesday, July 4, 2017

Java 9 is Coming With Modularity

Few weeks back, due to controversies surrounding modularity, RedHat and IBM voted against the next release of Java (9). But now everything seems to be back on track! Java Specification Request (JSR) 376 has been voted with a overwhelming majority of 24-0. RedHat abstained form voting, but expressed its support for the schedules of future versions of Java.

Major players like the Eclipse Foundation, Twitter and Hazelcast have took a 180 degree turn and voted in support of modularity as they are happy with the progress. Modularity was actually planned for Java 8. But due to the complexity of the project and inability to reach a unanimous opinion on the implementation, it has been postponed to version 9.

Project Jigsaw was started in a view to bring modularity to Java. Though it won't support all OSGi functionalities, this project can go hand in hand with OSGi for better scalability, availability and performance. Already Java is getting enough mistreatment in Oracle's hands. Let us hope this new change gives the platform a good thrust forward.

Monday, July 3, 2017

Top Five Free (as in Freedom) Music Sites

Recently a silly old man from Tamil Nadu was crying foul that he is not getting royalties for his music. Whenever they play his songs on TV or radio or perform it on stage, he expects a share of profit or at least he wants them to seek his permission. While the tyrannical copyright laws facilitate such inhuman extortion, where is the Free Software equivalent of Music? Software industry itself has its origin after the advent of copyright laws. But music is older than Homo sapiens species itself! Greatest works of music known to us were already centuries old when the crude copyrights laws were made. Except few hegemonic and anti-human societies, where advances in science and creativeness in arts were reserved to few group of people (and far worse in cases where it is locked down to people born in to particular family/community), world, at large, always shared knowledge and publicized creativity to the masses. So in this post-human world, are there real humans still left to share their knowledge and creativity to others? May be! They may be very few. But such people are for real. Here are some great sites which allow you access as well as to share music with lesser restrictive licenses.

1. opsound.org

Opsound is a site by Sal Randolph. inspired by free software and applies its philosophy to music. Musicians and sound artists can add their work to the Opsound repository using any of the copyleft licenses developed by Creative Commons. Everyone can download, share, remix, and reimagine music available in their site.

2. freemusicarchive.org

This site hosts lot of MP3 files and they also have apps for iOS and Android devices to access their content. Instead of modeling themselves purely after a later idea like Free Software, they also draw inspiration from Radio! They want to continue what radio did in previous generations, i.e. provide people with free music. Artists can upload their music in whole or part (and hence can attract more customers) and people can enjoy the music without any registration.

3. openmusicarchive.org

Artists Ben White & Eileen Simpson have started this project so that music works whose copyright term has expired and in public domain can be made available to a wider audience through internet. Music with no economic value which are usually forgotten by mainstream record companies are given a second life after their copyright term. Also the site encourages more people to collaborate and make their music publicly accessible.

4. cpdl.org

Is there a Wikipeida of music? Yes, it is cpdl.org. They have a large number of sheet music and music files (MIDI and other formats) in their archive. They host only "free" music without any restrictions even under the funny Mickey Mouse Law of USA. Since its inception in 2005, it has grown to a colossal collection of more than 25,000 scores by more than 2,800 composers.

5. musopen.org

A non-profit organization that aims to provide free sheet music, lessons and books for teaching music. Not only serving as a platform to share music, musopen.org aims to make music education reachable to more people.

What will happen if humans have no civilization or government? Do you think we will be killing each other for food and other needs? Do you think that survival of the fittest means "do whatever to survive"? The answer is "NO!". All communities of humans, be it from so called civilized cities to hunter-gatherers of dense forest, evolved to live a social and community life. Even our non-human ancestors lived in groups and not as "individuals with a will to survive at any cost". Our evolution has shaped us to be co-operative, collaborative and altruistic to some extant. The cut-throat competition and "survival-of-the-fittest" mantra we hear again and again are just modern and unnatural inventions which are making our way of life less and less sustainable. We shared everything before from land to food. Then slowly everything was taken out of the common ownership. The last thing remained in collective ownership was knowledge and creativity as they are inexhaustible resources. But human greed knows no limit and it has even snatched these inexhaustible resources from collective ownership. So to reverse the whole set of damage we have brought on our species and on the planet, we have to start from reversing the latest mistake. By liberating knowledge and setting it free, we can start the process of setting the entire humanity free!

Thursday, June 29, 2017

தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம்

அறிமுகம்:

NPTEL முத்திரை
தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் (The National Programme on Technology Enhanced Learning - NPTEL) இந்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் இணையத்தின் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை மற்றும் வாழ்வியல் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பாடங்களை காணொளி மற்றும் மின்-கல்வி வழியாக வழங்கிவருகிறது. இது ஏழு இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய அறிவியல்க் கழகங்களால் (IIScs) முன்னெடுக்கப்படுகிறது. மேலும் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்குபெறுகின்றன. இதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) கல்வித்திட்டம் மற்றும் பல முன்னணி பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள்  பின்பற்றப்படுகின்றன.

நோக்கம்:

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், பொறியியல் கற்கும் மாணாக்கர்களுக்கு எளிய பாடங்கள் மற்றும் காணொளிகள் மூலம் உதவுவதே ஆகும். பொதுவில், இந்திய இளைஞர்களிடம் அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த அறிவுத்திறனைப் பெருக்குவதன் மூலம் உலக அளவில் அவர்களின் தரத்தை உயர்த்தவும் இத்திட்டம் முனைகிறது.

வரலாறு:

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 1999ஆம் ஆண்டு "தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வி" குறித்த பட்டறை (Workshop) ஒன்று அமெரிக்காவின் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தோடு (Carnegie Mellon University) இணைந்து நடத்தப்பட்டது. அதன் முடிவில், இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்விக்கான திட்டத்தின் அவசியம் பரிசீலிக்கப்பட்டு, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்பட்டன. ஜூன், 2017 நிலவரப்படி, இதில் 1200க்கும் மேற்பட்ட காணொளிகள் மின்-கல்விப் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடங்கள் பற்றி:

ஒவ்வொரு பாடத்திட்டத்தில் தோராயமாக 40 ஒரு மணி நேரக் காணொளிகள் உள்ளன. இரு மற்றும் முப்பரிமாண அனிமேஷன்கள், பவர் பாய்ண்டு ஸ்லைடுகள், கரும்பலகை மற்றும் இதர கற்பிக்கும் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

துறைகள்:

வான்வெளிப் பொறியியல், விவசாயம், கட்டடக்கலை, வளிமண்டல அறிவியல், அடிப்படைப் பாடங்கள், கட்டுமானப் பொறியியல், கணினி, மின்னியல், மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பவியல், பொறியியல் வடிவமைத்தல், சுற்றுச்சூழல், பொது, வாழ்வியல் மற்றும் சமூகம், உயிர்த்தொழில்நுட்பம், மேலாண்மை, வேதிப் பொறியியல், வேதியியல் மற்றும் உயிர்-வேதியல், கணிதம், இயந்திரப் பொறியியல், உலோகவியல், சுரங்கப் பொறியியல், கடல் பொறியியல், இயற்பியல் மற்றும் துணிப் பொறியியல் போன்ற பல்வேறு துறைகள் இதில் அடங்கும்.

எழுத்து வடிவில்:

இத்திட்டத்தில் உள்ள எல்லாக் காணொளிகளின் பேச்சுக்களும் எழுத்துவடிவிலும் கிடைக்கிறது. பி.டி.எப்., காணொளி அடியெழுத்துக்கள் மற்றும் காணொளியாற்ற வெறும் பேச்சுக்களாக எம்.பி.3 கோப்புகளாகவும் பதிவிறக்கம் செய்யலாம். இவை அனைத்தும் NPTEL இணையத்தளத்திலேயே உள்ளன. வரும் நாட்களில், காணொளிகளுக்குள் தேடுவது மற்றும் வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பு போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளன.

குறிப்பிடத்தக்க வலைத்தளங்கள்:

1. http://nptel.ac.in  - அதிகாரப்பூர்வ இணையதளம்
2. http://www.youtube.com/iit
3. இணைய இணைப்பு இல்லாதவர்கள் NPTEL.BODHBRIDGE@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொண்டு இப்படங்களை குறுந்தகடுகளாகவும் குறைந்த கட்டணத்தில் பெறலாம்.

Tuesday, June 27, 2017

குறுக்கும் நெடுக்கும்

மின்தூக்கிகள் (lift) நம் வாழ்வில் ஆடம்பரங்களில் ஒன்றாக இருந்து தற்போது அத்தியாவசியமாக மாறிக்கொண்டுள்ளன. நகரங்களின் நெரிசல்களைச் சமாளிக்க அடுக்கடுக்காக மாடிகளைக் கட்டிக் கொண்டே போகிறோம். வானளாவிகளின் (skyscrapers) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. ஓரிரண்டு மாடிகள் என்றல் படிகளில் ஏறலாம். பத்துப் பதினைந்து மாடிகள் என்றல்? மேலும் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண்கள் என்று படிகளில் எற முடியாதவர்களும் உண்டல்லவா? ஆகவே மின்தூக்கிகள் நமக்கு இன்றியமையாத ஒன்றாகின்றன.


நான் சிலகாலம் முன் ஒரு பெரிய தொழில்நுட்பப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கு மின்தூக்கிகள் இருந்தன. ஆனால் மின்தூக்கி நம்மை இறங்கிவிடும் இடத்தில் இருந்து நாம் வேண்டிய இடத்திற்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. காரணம், உயரத்தில் மட்டுமல்ல, அகலத்திலும் அந்தக் கட்டடம் பெரிது. இதுபோன்ற சூழல்களில் மின்தூக்கி மட்டும் போதாதாதல்லவா? மேல்/கீழ் நோக்கி மட்டும் செல்லும் மின்தூக்கியாக இல்லாமல் பக்கவாட்டிலும் செல்லும் "மின்நகர்த்தி"யாக இருந்தால் எப்படி இருக்கும்? ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தைசன்க்ரப் (ThyssenKrupp) என்ற நிறுவனம் அப்படி ஒரு மின்நகர்த்தியை வடிவமைத்துள்ளது. அதற்க்கு "மல்டி" (The Multi) என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.


பொதுவாக மின்தூக்கிகள் கம்பியின் (cable) மூலமே மேலும் கீழும் இழுக்கப் படும். ஆனால் "மல்டி"யில் எந்தக் கம்பியும் கிடையாது! பின்பு எப்படி அது நகரும் என்று யோசிக்கிறீர்களா? ஜப்பானில் ஓடும் காந்தமிதவுந்தில் (Maglev Train) பயன்படுத்தப்படும் காந்தமிதவுத் (Magnetic Levitation) தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. காந்தப்புலத்தின் உந்தலால் மின்நகர்த்தி அந்தரத்தில் மிதக்கிறது. பின்பு மின்-காந்தப்புலத்தில் செய்யப்படும் மாற்றத்தால் அது குறிப்பிட்ட திசை நோக்கி நகர்கிறது. இதனால் கம்பிகள் பளு தாங்காமல் அறுந்து போவது, உராய்வு மற்றும் தேய்மானம் போன்ற தொல்லைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் மின்தூக்கிகள் போல் மேலும்/கீழுமாக மட்டும் அல்லாமல் இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் பக்கவாட்டிலும், குறுக்குவாட்டிலும்கூடப் பயணிக்கக்கூடியவை. இதனால் நேரம் மிச்சமாவதோடு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் இன்னல்களும் பெருமளவு குறையும்.

இதுகுறித்து தைசன்க்ரப்பின் முதன்மை செயல் அலுவலர் (CEO) ஆன்ட்ரியாஸ் ஸ்கைரென்பெக் (Andreas Schierenbeck) கூறுகையில் "500 டன் எடைகொண்ட தொடர்வண்டியை 500 மணிக்கு கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றால், 500 அல்லது 1000 கி.கி. எடைகொண்ட பெட்டியை நொடிக்கு 5 மீட்டர் நகர்த்த முடியாத என்ன!" என்றார். இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்தூக்கிகள் போல 3 முதல் 5 மடங்கு வரை விலை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. தற்போதுள்ள மின்தூக்கிகள் கம்பிகளின் பளுதாங்கும் திறன் காரணமாக குறிப்பிட்ட உயரத்திற்குமேல் பயன்படுத்த முடியாது. ஆனால், காந்தமிதவு மின்நகர்த்திகள் அதிஉயரக் கட்டடங்களில்கூடப் பயன்படுத்தலாம்.

Thursday, June 22, 2017

என் கோள்! என் முடிவு!

எதோ சீயக்காய் விளம்பரம் என்று உங்கள் உலாவியை மூடிவிடாதீர்கள்! சில நாட்களுக்கு முன், "நானே கப்பல்! நானே மாலுமி!" என்ற பதிவில் தானியங்கிக் கப்பல்கள் குறித்து நடந்துவரும் முன்னேற்றங்கள் பற்றிப் பார்த்தோம். தற்போது வந்துள்ள செய்திகளின் படி, நாசா (NASA) அனுப்பிய க்யூரியாசிட்டி ஆளில்லா ஆய்வுக்கலம் (Curiosity Rover) தனாகவே முடுவுகள் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி ஆய்வுக்கலம் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா, வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா அல்லது வாழும் வாய்ப்பு உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாயில் க்யூரியாசிட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபீ !
நன்றி: NASA/JPL-Caltech/MSSS

இதுவரை புவியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வந்த அக்கலம், தற்போது தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு இயந்திரக்கலத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் வேறு ஒரு கோளில் இருந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இங்கிருந்து அனுப்பப்படும் ஆணைகள் செவ்வாயில் உள்ள கலத்தை அடைய பல மணிநேரங்கள் ஆகலாம்! தூரம், இடையில் உள்ள தகவல்த்தொடர்பு செயற்கைக்கோள்களின் நிலை (position) போன்றவற்றால் இந்த வகையில் கலத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் நேரம் மற்றும் உழைப்பை வீணாக்கும் ஒன்றாக இருந்துவந்தது.

அதனால் ஏற்கனவே திட்டமிட்ட படி செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) மூலம் இந்தக்காலம் இயங்கத்தொடங்கியுள்ளது. எதேச்சையாக வெவ்வேறு இடங்களை லேசர் ஒளி கொண்டு உணர்ந்து அதில் செயற்கை அறிவுத்திறன் மூலம் ஆய்வுக்குச் சிறந்த இடம் எது என்று அடையாளம் கண்டு அந்த இடத்தை ஆராய்கிறது. இந்த செயற்கை அறிவுத்திறனுக்கு "அதிக அறிவியல் சேகரிப்புக்கான தன்னிச்சையான தேடல்" (Autonomous Exploration for Gathering Increased Science -AEGIS) என்று பெயரிட்டுள்ளனர். இந்த "ஏஜிஸ்" கருவி, 94% நேரங்களில் சரியான இலக்குகளை ஆராய்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது!

Wednesday, June 21, 2017

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் - இணையத்தில் உலாவ ஒரு நம்பகமான தோழன்

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் (Fire Fox Focus) ஒரு புதிய ஆண்டிராய்டு / ஐ-ஓ.எஸ் (Android / iOS) செயலி (App) ஆகும். மிகவும் அறியப்பட்ட உலாவிகளில் (Browsers) ஒன்றான ஃபயர் ஃபாக்ஸின் மற்றுமொரு பரிமாணமே இந்தப் புதிய உலாவி செயலி. இந்த உலாவி விளம்பரங்கள் மற்றும் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்கும் டிராக்கர்கள் (Trackers) ஆகியவற்றை தானாகவே தடைசெய்துவிடுகிறது. இந்தப் புதிய செயலியை ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலி வெறும் 4 எம்.பி அளவு மட்டுமே கொண்டது. எனவே உங்கள் கைப்பேசியின் வேகத்தை இது குறைக்காது.


சில வலைத்தளங்கள் உங்கள் கைப்பேசியில் உள்ள ஜீ.பீ.எஸ். மூலம் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்றார் போல விளம்பரங்களை காட்டுகின்றன. சில தளங்கள், நீங்கள் படிக்கும் பக்கங்கள், மற்றும் தேடும் சொற்களைக் கொண்டு உங்களை பற்றிய ஒரு ப்ரோபைலை உருவாக்கி வைத்துக்கொண்டு நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், எங்கு உள்ளீர்கள், என்ன விருப்பு/வெறுப்பு உள்ளவர் என்று ஒரு அனுமானத்திற்கு வருகின்றன. இதனால் என்ன தப்பு என்கிறீர்களா? அவர்கள் இத்தனை மெனக்கெட்டு இதைச் செய்ய என்ன காரணம்? இந்தத் தகவல்களைக்கொண்டு குறிவைத்து விளம்பரத்தாக்குதல் நடத்தி (Targeted Ad Campaigns), உங்களைப் பொருட்களை வாங்க வைப்பதே நோக்கம்.

ஆன்லைன் வர்த்தகம், நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற முன்யோசனையின்றி, நம்மைப் பல பொருள்களை வாங்க வைக்கும் ஒரு சிலந்திவலை. கடன் அட்டைகளும், ஆன்லைன் வர்த்தகமும் நம்மை தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் அடிமைகளாக்கியுள்ளன. முதலாளித்துவத்தின் இன்றியமையாத அம்சங்களான அதீத உற்பத்தி (over production), நுகர்வுக்கலாச்சாரம் (consumerism) மற்றும் கடன் மூலம் அடிமைப்படுத்துவது (debt slavery) எல்லாம் உங்கள் கைப்பேசிக்குள்ளும் ஒளிந்திருக்கின்றன. இந்நிலையில், ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் உங்களுக்கு ஓரளவேனும் இந்த துல்லியத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

மேலும் கூடுதல் பயன்களாக, இந்தச் செயலி மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது, உங்கள் கைபேசியில் உள்ள டேட்டா குறைவாகப் பயன்படுகிறது. இதனால் பக்கங்கள் சீக்கிரத்தில் தெரிகின்றன. மேலும் குறைவான மெமரி, டேட்டா மற்றும் ப்ராசசர் பயன்பாட்டால் உங்கள் மின்கலன்(பேட்டரி) பயன்பாடும் வெகுவாகக் குறைகிறது. கூகிளின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் ஆண்டிராய்டு இயங்குதளமும், அதனோடு வரும் உலாவியும் (ஆப்பிள்/ஐ-ஓ.எஸ் குறித்து சொல்லவே வேண்டாம்!) ஏற்படுத்திடும் அச்சுறுத்தல்களில் இருந்து நாம் சற்றேனும் தப்ப இந்த புதிய உலாவி நமக்கு உதவும் என்று நம்புவோமாக!

Monday, June 12, 2017

நானே கப்பல்! நானே மாலுமி!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சில கப்பல் நிறுவனங்கள் தானியங்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ஆம் ஆண்டையொட்டி இவ்வகைக் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. மிட்ஸு ஓ.எஸ்.கே. லைன்ஸ் (Mitsu OSK Lines) மற்றும் நிப்பான் யூஸென் (Nippon Yusen) ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன.
செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence - AI) மூலம் கப்பல் செல்ல மிகவும் பாதுகாப்பான, குறைந்த தூரம், நேரம் மற்றும் எரிபொருள் செலவு ஆகும் வழித்தடத்தை தானே கண்டறிந்து பயணிக்கும் வகையில் இக்கப்பல்கள் வடிவமைக்கப் படவுள்ளன. முதல் கட்டமாக ஒரு சிறு ஊழியர்குழு கப்பலுடன் பயணிக்கும். பின்பு நாளாடைவில் முற்றிலும் தன்னிச்சையாக இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டுக்குள்ளாகவே தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் (remote controlled) கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கப்பல்த் துறை ஆய்வாளர் ஆஸ்கர் லெவாண்டர் தெரிவித்துள்ளார். என்னதான் தானாகவே இயங்கும் திறன் இருந்தாலும் சில இன்றியமையாத சூழ்நிலைகளில் மனித மாலுமி ஒருவரின் முடிவுகள் தேவைப்படும். அந்நேரங்களில், கரையில் இருந்தே கண்கணிக்கும் ஒரு மாலுமி, வேண்டிய கட்டளைகளை கப்பலுக்கு அனுப்ப முடியும்.

இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன விந்தைகள் நமக்காகக் காத்திருக்கின்றனவோ!

Friday, June 9, 2017

India Ranks 89 in Average Internet Connection Speed

According to the latest Akami State of The Internet Report, India ranks 89 globally in average connection speed. The report observes that the average connection speed in India is around 6.5 Mbps. This makes India 14th of the 15 countries surveyed in the Asia Pacific region. It is worth noting that Asia Pacific region contains the global leader South Korea.
In terms of peak speed, India is in 15th position in Asia Pacific region and  the global rank is an abysmal 97. Despite the high penetration of 4G networks like Jio and Airtel and higher smartphone adaptation, the country remains far behind both globally and in the neighborhood in terms of connectivity speed.

Further on the distribution of broadband speeds, 42% of Indians have 4 Mbps lines, 19% have 10 Mbps lines and only 10% have 15 Mbps lines. On an interesting side note, USA ranks 28th in terms of Wireless Connectivity speeds!

வீட்டு விலங்குகளின் தோற்றம்

நாம் நினைப்பது போல எல்லா விலங்குகளும் கடவுளால் தனித்தனியாகப் படைக்கப்பட்டவை அல்ல. இன்று நாம் வீட்டு விலங்குகளாக வளர்க்கும் பல விலங்குகள் மனித வரலாற்றின் பிந்தைய காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டவையே! அதாவது பின்வரும் இரண்டில் எதோ ஒன்று.

1. மனிதன் தன்னுடைய தேவை கருதி ஒரு வகை விலங்கைப் பழக்கப்படுத்தி, தனக்கு வேண்டிய பண்புகள் உள்ள விலங்குகளை மட்டும் தேர்வு முறையில் இனப்பெருக்கம் செய்து (selective breeding) தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது.

2. மனிதனின் உணவு மற்றும் இருப்பிடம் சார்ந்த பழக்கங்களால் மனிதனோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மிருக இனங்கள் சில, காலப்போக்கில் இயற்கையாகவே வீட்டு விலங்குகளாகப் பரிணமித்தது (coevolution).

விலங்குகள் மட்டும் அல்ல, பூச்சிகள், தாவரங்கள் என்று பலவும் இவ்வாறு தெரிவு முறை இனப்பெருக்கம் மூலமோ, சார்புப் பரிணாமம் மூலமோ (coevolution) தற்கால நிலையை அடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக பேன்களை எடுத்துக்கொண்டால், மனிதன் ஆடை அணியும் பழக்கம் வரும் முன் வாழ்ந்த பேன் இனம், அவன் ஆடை அணிய ஆரம்பித்த பிறகு சார்புப் பரிணாம வளர்ச்சியால் வேறு வைகையாகப் பரிணமித்தது. அதுபோல, மனிதன் தன் விருப்பத்தின்படி தேர்வு செய்த பண்புகள் உள்ள செடிகளை பயிரிட்டு ஒரே வகையாக இருந்த காட்டு முட்டைகோஸ் செடியை, முட்டைகோஸ், காளிபிரளவர், நூல்கோல் போன்ற பல வகைத் தாவரங்களாக மாற்றினான். இப்படி நம் கண்முண்ணே இருக்கும் பலவும் நம்மை அறியாமலோ அல்லது நம் விருப்பத்தின் படியோ நம்மால் உருப்பெற்றவை என்றால் நம்ப முடிகிறதா?

சரி, இங்கே சில விலங்குகளை மட்டும் எப்போது, எங்கு, எதிலிருந்து வீட்டு விலங்குகளாக மனிதனால் மாற்றப்பட்டன என்று பார்ப்போம்.(இந்த அட்டவணை காலத்தால் முந்தையது தடங்கிப் பிந்தியது வரை தொகுக்கப்பட்டுள்ளது)

வ.எண் விலங்கு/பறவை மூதாதை காட்டு இனம் (wild ancestor) காலம் இடம்
1 நாய் ஓநாய் கி.மு. 13,000 ஐரோப்பா
2 வெள்ளாடு பாரசீக ஐபெக்ஸ் கி.மு.10,000 மேற்கு ஆசியா (துருக்கி, இரான்)
3 பன்றி காட்டுப் பன்றி கி.மு. 9,000 மேற்கு ஆசியா, சீனா
4 செம்மறி ஆடு காட்டுச் செம்மறி கி.மு. 8,500 துருக்கி
5 மாடு (திமில் இல்லாத இனம்) ஒளரக்ஸ் கி.மு. 8,000 இந்தியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா
6 மாடு (திமில் உள்ள இனம்) இந்திய ஒளரக்ஸ் கி.மு. 8,000 இந்தியா
7 பூனை ஆபிரிக்கக் காட்டுப் பூனை கி.மு. 7,500 மேற்கு ஆசியா
8 கோழி காட்டுக்கோழி கி.மு. 6,000 இந்தியா, தென்கிழக்கு ஆசியா
9 கழுதை ஆபிரிக்கக் காட்டுக் கழுதை கி.மு. 5,000 எகிப்து
10 வாத்து காட்டு வாத்து கி.மு. 4,000 சீனா
11 எருமை காட்டெருமை கி.மு. 4,000 வடகிழக்கு இந்தியா, சீனா
12 ஒட்டகம் பாலை ஒட்டகம் கி.மு. 4,000 அரேபியா
13 குதிரை காட்டுக் குதிரை கி.மு. 3,500 மத்திய ஆசியா
14 புறா மாடப்புறா கி.மு. 3,500 மத்தியத் தரைக்கடல்ப் பகுதி
15 வான்கோழி காட்டு வான்கோழி கி.பி. 100 - 200 மெக்சிக்கோ, யூ.எஸ்.ஏ
16 தங்க மீன் பிரஷ்ஷியக் கெண்டை கி.பி. 300 - 400 சீனா
17 சண்டை மீன் (fighter fish) பெட்டா மீன் கி.பி. 1800 தாய்லாந்து
18 வளர்ப்பு நாரி (ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது) நாரி கி.பி. 1950 சோவியத் ஒன்றியம்

Friday, June 2, 2017

ஈசல் வறுவல்!

கேட்டாலே சிலருக்கு பிரட்டிக்கொண்டு வரலாம்... எப்படி சிலருக்குப் பன்றிக்கறி பற்றிய சிந்தனையே ஒவ்வாத ஒன்றோ, எப்படி சிலருக்குக் கருவாட்டு வாடையே ஆகாத ஒன்றோ, எப்படி சிலருக்கு வெண்டைக்காயே வேண்டாத ஒன்றோ, அப்படி பழக்கம் இல்லாதவருக்கு, இதுவும் அறுவோறுப்பாகவே இருக்கும். ஆனால், பிறந்ததில் இருந்து வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் ஈசலை உணவாகப் பார்த்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு இது எதார்த்தமான உணவே! இந்தப் பதிவின் நோக்கம் எல்லோரும் ஈசல் சாப்பிடவேண்டும் என்பதல்ல. உணவுப் பழக்கங்கள், இடம்தோறும், காலம்தோறும், கலாச்சாரந்தோறும் மாறும் ஒன்று. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது மற்றவருக்கு முற்றிலும் ஒவ்வாத ஒன்றாகவும், உங்களுக்கு கேட்கவே சகிக்காத ஒன்று மற்றவர் நாக்குக்கு சுவையானதாகவும் இருக்கலாம். உங்கள் உணவை அவர் வாயிலும், அவர் உணவை உங்கள் வாயிலும் திணிக்காத வரையில், யாரும் வாந்தி எடுக்கத் தேவை இல்லை. உங்கள் உணவை உங்கள் வாயிலிருந்தும், அவர் உணவை அவர் வாயிலிருந்தும், பிடுங்காத வரை, யாரும் ஆத்திரப்படவும் தேவையில்லை.

எப்படிப் பிடிப்பது?

மழை நாட்களில், மின்விளக்குகள் முன் படபடக்கும் சிறகுகளுடன் நடனமாடும் ஈசல்களை பார்க்காதவர்கள் வெகு சிலரே! இன்று நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக கீழே அதன் படத்தை இணைத்துள்ளேன். முதலில் நீங்கள் பிடிக்கும் ஈசல் உண்ணத்தகுந்ததா என்று சரிபார்த்துக் கொள்வது அவசியம். விவரம் தெரிந்த நண்பர்களிடம் கேட்பது நல்லது. ஈசல் என்று பறக்கும் எறும்புகளை பிடித்த சிறுவர்களையும் என் இளம் வயதில் கண்டதுண்டு. பெரும்பாலும் மாலை நேரமே ஈசல் வேட்டைக்கு உகந்தது (அப்போதுதான் அவை வீடுகள் நோக்கிப் படை எடுக்கும்). அதிகாலையிலும் சில சமயங்களில் வயல்வெளிகள், புல்வெளிகள் போன்ற இடங்களில் ஈசல் கூட்டம் சுற்றுவதுண்டு.
நன்றி: விக்கிமீடியா
ஒரு சொம்பு அல்லது தம்பளரில் கால்பங்கு நீர் நிரப்பிக்கொள்ளவும். ஈசல்கள் அதிகம் சுற்றும் இடத்தில் அமர்ந்து அவற்றைக் கையால் பிடிக்கவும். பயம் வேண்டாம்... அவை உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை! பிடித்த ஈசலை நீரில் போடவும். அதன் சிறகுகள் நீரில் பட்டவுடன் பெரும்பாலும் உதிர்ந்துவிடும். இல்லையென்றாலும் அவை பறக்கும் தன்மை போய்விடும். சிறிது நேரத்தில் பாத்திரம் நிரம்பி விடும். பின்பு ஒரு முறத்திலோ, அகலமான தட்டிலோ அல்லது சொளவிலோ ஈசல்களைப் பரப்பி காய வைக்கவும். ஒன்றிரண்டு ஈசல்கள் நடந்து தப்ப முயலலாம்! மறுநாள் வெயில் வந்தால் ஈசல்களை வெயிலில் காயவிடவும். காய்ந்தபின் லேசாகப் பரசி சிறகுகளை நீக்கவும். நன்று காய்ந்த ஈசல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அரிசிப்பொரி போல இருக்கும்.

எப்படிச் சமைப்பது?

அரிசிப்பொறி, பொட்டுக்கடலை (வறுகடலை/உடைத்தகடலை), உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது எண்ணை விட்டு வாணலியில் மிதமான சூட்டில் வறுக்கவும். கலகலவென நன்கு வறுபட்டவுடன், தட்டில் வைத்துப் பரிமாறவும்! குளிர்கால மாலைகளில் எளிதாகக் கிடைக்கும் இந்த புரதம் நிறைந்த ஈசல் வறுவலின் சுவையும் அருமையாக இருக்கும்.

சிலர் (நானும்கூட) ஈசல்களைப் பிடித்தவுடன் பச்சையாக உண்பர். சமைக்காத நிலையில் அதன் சுவை, பால்க்  கருது (சோளம்) போல இருக்கும். பச்சை(சமைக்காத) ஈசல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றாலும், அதற்குமுன் அது ஏதாவது அசுத்தமான இடங்களில் அமர்ந்திருந்தால் நோய்த்தொற்று ஏற்படலாம். ஆகவே சமைத்து உண்பது சாலச்சிறந்தது!

புறநானூற்றில் ஈசல் உணவு!

சில வருடங்கள் முன்பு, தமிழாசிரியரான என் தந்தை புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் 119-வது பாடலில் ஈசல்களை மோருடன் சேர்த்துப் புளிச்சாறு (புளிச்சோறு கிண்டப் பயன்படுவது) தயாரித்ததாகக் குறிப்புள்ளதை எனக்குச் சொன்னார். இப்படியும் ஈசலை சமைக்க முடியுமா?!? ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்! தற்போது நகரத்தில் வாழும் எனக்கு வாய்ப்பிருக்கும் போது இதை முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

குறிப்பு: இந்த இடுகை 2010ஆம் ஆண்டு வேறு ஒரு வலைப்பூவில் நான் ஆங்கிலத்தில் எழுதிய இடுகையின் சில மாறுபாடுகள் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

Monday, April 17, 2017

தடுப்பூசி குறித்த சீமானின் அபாயகரமான நிலைப்பாட்டுக்கு ஒரு சவால்....

தடுப்பூசிகள் தேவையே இல்லை, மரபுவழி மருத்துவமும், சுத்தமான காற்று/நீர்/உணவும் நோய்களில்லாத வாழ்வைத்தரும் என்று திரைப்பட நடிகர் சீமான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார். யாரும்  சுத்தமான காற்றும், நீரும், உணவும் வேண்டாம் என்றோ, இவற்றால் பயன் இல்லை என்றோ சொல்ல முடியாது. நம்முடைய பிரச்சனை அதுவல்ல. தடுப்பூசிகள் தேவையில்லை என்று முரண்டு பிடிக்கும் முட்டாள்தனமே நம் பிரச்சனை.

நோய்கள் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர நுண்ணுயிரிகளால் வருவதை அவர் மறுக்கிறாரா? நோய்கள் பலவகைப்படும். பிறவிக்கு குறைபாடுகள், சத்துப் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் மாற்றங்கள், பரம்பரை வியாதிகள், உணவு/வாழ்க்கை முறையினால் வரும் நோய்கள், தொற்று வியாதிகள் என்று பல உள்ளன. இதில், தடுப்பூசிகள் தொற்று நோய்களையே பெரும்பாலும் தடுக்கின்றன. இப்படி இருக்க, சீமானின் பேச்சு, வாழ்க்கைமுறையினால் வரும் நோய்களைப்போல தோற்று நோய்களையும் உணவு, உடற்பயிற்சி போன்ற வழிகளில் சரி செய்துவிடலாம் என்பது போல உள்ளது.

நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தால், நம் நாட்டு மரபுவழி மருத்துவங்களில்கூட பல தோற்று நோய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த நோய்கள் நவீன அறிவியல் மற்றும் செயற்கை உரம்/பூச்சிக்கொல்லி/மாசு ஆகியவை தோன்றும் முன்பே இருந்துள்ளன என்பதற்கு நம் நாட்டு மருத்துவ முறைகளான சித்த/ஆயுர்வேத நூல்களே சான்று. மேலும், வாழ்க்கைமுறை மாற்றங்களால் இன்று நம்மை அதிகம் தாக்கும் நோய்கள்கூட அன்றே இருந்துள்ளன. அவற்றின் அளவு குறைவாக இருந்தது என்பதே சரி. ஆகா, சீமான் சொல்வது சரி என்றால், எதனால் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் தொற்று நோய்களுக்கு கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்?

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்... தலைப்பில் உள்ளபடி, சீமானோ, அவரது தம்பிகளோ தடுப்பூசி இல்லாமல் வெறிநாயிடம் கடிவாங்கி தங்கள் வீரத்தை நிரூபிக்க முடியுமா? வெறிநாய் கடிக்கு எந்த உணவு மருந்தாகும் சீமான் அவர்களே? உங்கள் பாரம்பரியம் பண்பாடு என்ற போலி இனஉணரவுக்கு மயங்கி, தமிழர்களின் பிள்ளைகள் நோய்கள் வந்து உயிரையே, நல்ல உடல் நலத்தையோ இழந்தால் அதற்க்கு நீங்கள் பொறுபேர்ப்பீர்களா? ஒரு சமுதாயத்தையே அறிவுக்குருடராக்குவதே உங்கள் வேலையா?

சீமான் மற்றும் அவர் தமபிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒருவன் தன்  நம்பிக்கையினால் தான் பெற்ற பிள்ளையை நரபலி கொடுப்பது சரியா? அதுபோலவே உங்கள் போலி இணைப் பெருமிதத்தால் குழந்தைகளின் உயிரோடும் உடல்நலத்தோடும் விளையாடுவதும் தவறே! உங்கள் நம்பிக்கையும் மூட நம்பிக்கையே!